தேசிய செய்திகள்

கர்நாடகா: மைசூரு ஓட்டலில் தங்குவதற்கு இடம் கிடைக்காததால் வேறு ஓட்டலில் தங்கிய பிரதமர்

கர்நாடகாவில் உள்ள பிரபலமான மைசூரு ஓட்டலில் தங்குவதற்கு இடம் கிடைக்காததால், பிரதமர் மோடி ரேடிசன் புளூ ஓட்டலில் தங்கினார்.

தினத்தந்தி

பெங்களுரூ.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மைசூரு அருகே உள்ள கோயிலில் நடக்கும் அபிஷேகத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், பெங்களூரு - மைசூரு இரட்டை ரயில் பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு மைசூரு நகருக்கு வந்தார்.

வழக்கமாக பிரதமர் மோடி மைசூரு நகருக்கு வந்தால் அங்குள்ள உள்ள புகழ்பெற்ற லலிதா மஹால் பேலஸ் ஹோட்டலில் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்படும். இந்த முறையும் பிரதமர் தங்குவதற்காக லலித் மஹால் பேலஸில் அறைகள் கேட்கப்பட்டன. ஆனால் திருமண சீசன் என்பதால், அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ஹோட்டல் நிர்வாகம் கூறிவிட்டது. இதையடுத்து மோடிக்கு, ஹோட்டல் ரேடிஸன் புளூவில் அதிகாரிகள் அறை எடுத்து தங்க வைத்தனர்.

ரேடிஸன் புளூ ஓட்டலிலும் தொழிலதிபர் ஒருவர் குடும்பத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் நேரத்தை மற்றியமைக்க ஹோட்டல் நிர்வாகம் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சியின் நேரம் மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் அதன்காரணமாகவே, பிரதமர் வருகைக்கு முன்பாக நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்