இதற்காக தடுப்பூசிகள் எங்கே? என்ற ஹேஷ்டாக்கில் அவர் பதிவுகள் வெளியிடுவதை வாடிக்கையாக்கி உள்ளார். நேற்று அவர் வெளியிட்ட பதிவில், ஜூலை மாதம் போய் விட்டது. தடுப்பூசி தட்டுப்பாடுதான் இன்னும் போகவில்லை என சாடி இருக்கிறார். இதற்கு மத்திய அரசின் சார்பில் சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
ஜூலை மாதத்தில் இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த மாதம் அது மேலும் விரைவுபடுத்தப்படுகிறது. இந்த சாதனைக்காக நமது சுகாதாரப்பணியாளர்களை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம். இப்போது நீங்களும் (ராகுல்காந்தி) அவர்களுக்காகவும், நாட்டுக்காகவும் பெருமைப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.