தேசிய செய்திகள்

கர்நாடகம் செல்பவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அறிவிப்பு

கோவா, கேரளாவில் இருந்து கர்நாடகம் செல்பவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கொரோனா 3-வது அலை பரவல் காரணமாக கர்நாடக அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கோவா, கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இதனால் கோவா, கேரளாவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று கூறி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு கூறியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து