தேசிய செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக ராஜேஷ் வெர்மா நியமனம்

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக ஒடிசா கேடரை சேர்ந்த ராஜேஷ் வெர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் வெர்மா ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் முதன்மை செயலாளராகவும், ஒடிசா அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளராகவும் ராஜேஷ் வெர்மா பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து