கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஒடிசா மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இலவச 'வை-பை' வசதி

ஒடிசா மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இலவச ‘வை-பை’ வசதி அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

ஒடிசா மாநில ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு இலவசமாக 'வை-பை' வசதி வழங்கப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில், ஒடிசா பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு 2023-24 கல்வியாண்டு முதல் இலவச 'வை-பை' வசதி வழங்கப்படும் என மாநில உயர் கல்வித்துறை மந்திரி ரோகித் பூஜாரி தெரிவித்தார். மாணவர்கள் தலா ஒரு ஜி.பி. டேட்டாவை பெறுவார்கள் என்ற அவர், இதுதொடர்பாக முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாநில மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அனைத்து அரசு பல்கலைக்கழங்களிலும் இப்போது 'வை-பை' வசதி உள்ளது.

மாணவர்களுக்கு கடந்த 2016-17-ம் ஆண்டு முதல் ஒரு சதவீத வட்டியில் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள வட்டித்தொகையை அரசு அளிக்கிறது என்று அவர் கூறினார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்