தேசிய செய்திகள்

கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு 328 ஆக உயர்வு

கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 328 ஆக உயர்ந்து உள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

இந்தியாவில் அதிகளவு கொரோனா தினசரி பாதிப்பு வரிசையில் கேரளாவும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு விவரம் பற்றி மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,944 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 463 பேர் இன்று குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 31,098 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவில் ஒரு நாள் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக இன்று உள்ளது. இதனால், மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 328 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்