தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல், ராணுவ வீரர் வீரமரணம்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பூஞ்ச் செக்டாரில் மாலை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

இருதரப்பு சண்டையில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.