தேசிய செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல்; நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் - சிராக் பஸ்வான்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பஸ்வான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தேசிய நலன் சார்ந்தது என்றும், இது நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தை ராம் விலாஸ் பஸ்வானின் காலத்தில் இருந்தே லோக் ஜன்சக்தி கட்சி 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை