Image Courtacy: ANI 
தேசிய செய்திகள்

ஒடிசாவில் 25 சதவீதத்தினர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர் - அதிகாரி தகவல்

ஒடிசாவில் 25 சதவீதத்தினர்தான் பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புவனேசுவரம்,

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

ஒடிசாவில் இந்த தடுப்பூசி போடுவதில் மக்களிடம் போதிய ஆர்வம் இல்லை. 25 சதவீதத்தினர்தான் (80.90 லட்சம் பேர்) இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.

இதுபற்றி மாநில சுகாதார இயக்குனர் பிஜய் பானிகிரகி கூறும்போது, "30-ந்தேதிவரை இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும். மக்கள் ஆர்வமுடன் வந்து அதை செலுத்திக்கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு