தேசிய செய்திகள்

ஒப்புகைச்சீட்டு எண்ணும் விவகாரம்: தேர்தல் கமி‌ஷனில் எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் மனு

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பொருட்படுத்தாமல், பா.ஜனதா அல்லாத அரசு அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும் விவகாரத்தில், 50 சதவீத சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நிராகரித்து விட்டது.

இருப்பினும், தேர்தல் கமிஷனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் இதுகுறித்து மனு அளிக்க எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. இத்தகவலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

ஆந்திர முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் இந்த மனுவை அளிப்பார்கள் என்று தெரிகிறது. கூடுமானவரை அதிக ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு