தேசிய செய்திகள்

கோவா மாநிலத்தில் 144 தடை உத்தரவு

கோவா மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பனாஜி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வாஜித் ரானே நேற்று நிருபர்களிடம் இதை தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும் வாகனங்கள் தவிர அனைத்து அரசு போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. பிற மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். திருமணவிழா, திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் அடுத்த அறிவிப்பு வரும்வரை தடை செய்யப்பட்டு இருக்கின்றன.

கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இதைத்தொடர்ந்து செய்தால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து