தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 1.91 கோடி தடுப்பூசிகள் இருப்பு- மத்திய சுகாதாரத்துறை தகவல்

நாடு முழுவதும் இதுவரை 38 கோடியே 14 லட்சத்து 67 ஆயிரத்து 646 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் தற்போது 1 கோடியே 91 லட்சத்து 55 ஆயிரத்து 630 தடுப்பூசிகள் இருப்பில் இருக்கின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை மாநிலங்களுக்கு 39.46 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் வீணானவை உள்பட மொத்தம் 37 கோடியே 55 லட்சத்து 38 ஆயிரத்து 390 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தற்போது மேலும் 12 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 38 கோடியே 14 லட்சத்து 67 ஆயிரத்து 646 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 40 ஆயிரத்து 325 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்