தேசிய செய்திகள்

பாகிஸ்தான் 2 போர் விமானங்களை அனுப்பி இந்திய பயணிகள் விமானத்தை வழிமறிக்க முயன்றது அம்பலம்

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்த பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றநிலை உருவானது. அந்த சூழ்நிலையில் செப்டம்பர் 23-ந் தேதி டெல்லியில் இருந்து காபூலுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் 120 பயணிகளுடன் பாகிஸ்தான் வழியாக சென்றது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும் அந்த விமானத்தை வானிலேயே இடைமறிக்க பாகிஸ்தான் 2 எப்-16 போர் விமானங்களை அனுப்பியது.

அப்போது பாகிஸ்தான் போர் விமானிகள் இந்திய விமானியிடம் தாழ்வாக பறக்கும்படியும், விமான விவரங்களை தெரிவிக்கும்படியும் கூறினார்கள். அவர்கள் அது இந்திய போர் விமானம் என்று கருதியதாக தெரிகிறது. ஆனால் பயணிகள் விமானம் என்று தெரிந்ததும் அந்த 2 பாகிஸ்தான் போர் விமானங்களும் ஆப்கானிஸ்தான் எல்லை வரை இந்திய பயணிகள் விமானத்துக்கு பாதுகாப்பாக சென்றன. இந்த தகவலை மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை