தேசிய செய்திகள்

காஷ்மீரின் இரு வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு

ஜம்மு மற்றும் காஷ்மீரின் இரு வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பிரிவில் போர்நிறுத்த ஒப்பந்த மீறலாக பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, பூஞ்ச் நகரில் தேக்வார், மால்டி மற்றும் டல்லான் ஆகிய பகுதிகளில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6.15 மணியளவில் மற்றொரு துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கும் இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி அளித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்