தேசிய செய்திகள்

பஞ்சாப் எல்லையில் மீண்டும் சம்பவம் ஏ.கே. துப்பாக்கியை சுமந்து வந்த பாகிஸ்தான் டிரோன்

பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடந்து சமீப நாட்களாக பாகிஸ்தான் டிரோன்கள் மீண்டும் மீண்டும் ஊடுருவி வருகின்றன.

தினத்தந்தி

புதுடெல்லி, 

பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடந்து சமீப நாட்களாக பாகிஸ்தான் டிரோன்கள் மீண்டும் மீண்டும் ஊடுருவி வருகின்றன. கடந்த மாதத்தில் 2-க்கும் மேற்பட்ட டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்த நிலையில் நேற்று பகல் 1 மணி அளவில் மீண்டும் ஒரு பாகிஸ்தான் டிரோன் விமானம், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சுமந்தபடி இந்திய எல்லைக்குள் ஊடுருவியது. இதை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர்.

குருதாஸ்பூர் மாவட்டம் மெல்டா கிராமத்தையொட்டிய எல்லைப்பகுதியை கடந்து இந்த டிரோன் ஊடுருவியது. அது சுட்டுவீழ்த்தப்பட்டதில் நபிநகர் கிராமத்தின் தோட்ட வயல்வெளியில் விழுந்தது. சம்பவ இடத்தில் டிரோனில் இணைக்கப்பட்டிருந்த ஏ.கே. ரக துப்பாக்கி, 2 தோட்டா குப்பிகள் மற்றும் 40 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை