தேசிய செய்திகள்

பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

புதிய வங்கி கணக்கு துவங்க, லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள, வருமான வரி விலக்கு பெற, 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்ய உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கும் பான் கார்டு அவசியமாகிறது.

பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான காலக்கெடு ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டது. எனினும் டிசம்பர் 31 ஆம் தேதி(நாளை) இதற்கான கடைசி தேதியாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது இதற்கான கடைசி தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து