தேசிய செய்திகள்

நாடாளுமன்ற இடைத்தேர்தல்; குடும்பத்துடன் வந்து வாக்களித்த இமாசல பிரதேச முதல்-மந்திரி

இமாசல பிரதேசத்தில் மாண்டி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடும்பத்துடன் வந்து முதல்-மந்திரி வாக்களித்து உள்ளார்.

சிம்லா

இமாசல பிரதேசத்தில் மாண்டி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், முர்ஹாக் பகுதியில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வந்து வாக்களித்து உள்ளனர்.

இதில், காலை 11 மணி நிலவரப்படி 17.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற நவம்பர் 2ந்தேதி நடைபெறும்.