முஜாகிதீன் பயங்கரவாதி அரிஸ் கான் 
தேசிய செய்திகள்

பாட்லா ஹவுஸ் துப்பாக்கி சண்டை வழக்கு: பயங்கரவாதிக்கு மரண தண்டனை; டெல்லி கோர்ட்டு உத்தரவு

கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன.

அவற்றில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் டெல்லி பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்தனர். அவர்களுக்கும், டெல்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 2 இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் பலியானார்கள். மோகன்சந்த் சர்மா என்ற போலீஸ் இன்ஸ்பெக்டரும் உயிரிழந்தா.

இதில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதி அரிஸ் கான், 10 ஆண்டு தேடுதலுக்கு பிறகு, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிடிபட்டான்.

இந்த வழக்கு, டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இன்ஸ்பெக்டர் கொலை உள்ளிட்ட அரிஸ்கான் மீதான குற்றச்சாட்டுகள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கடந்த 8-ந் தேதி நீதிபதி சந்தீப் யாதவ் அறிவித்தார்.

இந்தநிலையில், அரிஸ்கானுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சந்தீப் யாதவ் நேற்று உத்தரவிட்டார். இது, அரிதினும் அரிதான வழக்கு என்று நீதிபதி கூறினார்.