தேசிய செய்திகள்

பா.ஜனதா மீதான நம்பிக்கை மக்களிடையே அதிகரிப்பு: சுரேஷ் கோபி

பா.ஜனதா மீதான நம்பிக்கை மக்களிடையே அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி சுரேஷ் கோபி கூறினார்.

தினத்தந்தி

திருச்சூர்,

மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரி சுரேஷ் கோபி திருச்சூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற உள்ளாட்சி தேர்தலில் திருச்சூர் மாநகராட்சியில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று நம்புகிறேன். பா.ஜனதா மீதான நம்பிக்கை மக்களிடையே படிப்படியாக அதிகரித்து, தற்போது உயர்ந்த நிலையை எட்டி உள்ளது. திருச்சூரில் பா.ஜனதாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது.

இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் ஆர்வமுடன் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். கேரள மக்களின் உண்மையான மனநிலையை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், திருச்சூருக்கு வர வேண்டும். அங்கு அவர்களுடன் கலந்துரையாடினால் தெரியவரும்.

உள்ளாட்சி தேர்தலில் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து பா.ஜனதா போட்டியிட்டால், திருச்சூர் மாநகராட்சி பா.ஜனதா ஆளுமைக்குள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்