தேசிய செய்திகள்

15-ந்தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி - மத்திய மந்திரி தகவல்

15-ந்தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வெங்காயம் விலை அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அதன் ஏற்றுமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது.

விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 15-ந்தேதியில் இருந்து வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் கூறினார். இது, விவசாயிகளின் வருவாயை பெருக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?