தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி

கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் அனைத்து வகையான கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் 2 வகையில் உள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக அரசின் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவத;-

தட்சிண கன்னடா, ஹாசன், தாவணகெரே, சாம்ராஜ்நகர் ஆகிய 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. அதாவது அந்த மாவட்டங்களில் மளிகை கடைகள் மட்டுமின்றி அனைத்து வகையான வணிக கடைகளையும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் குளிர்சாதன வசதி கொண்ட கடைகளை திறக்க அனுமதி இல்லை. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு