தேசிய செய்திகள்

கங்கனா ரணாவத்தின் வெற்றிக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு

இமாசல பிரதேசத்தில் மண்டி தொகுதிக்கான மக்களவை தேர்தலில், கங்கனா ரணாவத்தின் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் நேகி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

தினத்தந்தி

சிம்லா,

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு கங்கனா ரணாவத் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இந்த தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட லாயிக் ராம் நேகி என்பவர் இமாசல பிரதேச ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

இமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்ட பகுதியை சேர்ந்தவரான நேகி, வேட்பு மனுவில் தேவையான விசயங்களை பூர்த்தி செய்த பின்னரும், தேர்தலுக்கு முன்பே தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது என தெரிவித்து இருக்கிறார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 100-ன் கீழ், இந்த தேர்தலில் கங்கனா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கும்படி மனுவில் கோரியிருக்கிறார்.

எனினும், அவருடைய வேட்பு மனு சட்டவிரோத வகையில் நிராகரிக்கப்பட்டது என நேகி நிரூபிக்க தவறினால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படும் சூழலும் உள்ளது.

இந்த மனு மீது ஆகஸ்டு 21-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி பா.ஜ.க. எம்.பி. கங்கனாவுக்கு கோர்ட்டு சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது என நேகியின் வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து