Image Courtesy : @PankajPachauri 
தேசிய செய்திகள்

'பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து 10 வருடங்கள் ஆகிறது' - முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகர் விமர்சனம்

பத்திரிக்கையாளர்களின் 62 திட்டமிடாத கேள்விகளுக்கு மன்மோகன் சிங் பதிலளித்தார் என பங்கஜ் பச்சோரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய பிரதமராக உள்ள ஒருவர் செய்தியாளர் சந்திப்பை நடத்தி 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாக மத்திய அரசின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகரும், பத்திரிக்கையாளருமான பங்கஜ் பச்சோரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி இந்திய பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 100-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் 62 திட்டமிடாத கேள்விகளுக்கு பதிலளித்தார் என பங்கஜ் பச்சோரி தெரிவித்துள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து