தேசிய செய்திகள்

இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்களை நேரில் அழைத்து பேச பிரதமர் மோடி முடிவு

இந்திய ஒலிம்பிக் போட்டி வீர்ர், வீராங்கனைகளை டெல்லி செங்கோட்டைக்கு சிறப்பு விருந்தினர்களாக வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விட இருக்கிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுடன் இந்தியாவும் கலந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து போட்டியாளர்களையும் வருகிற 15ந்தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டைக்கு சிறப்பு விருந்தினர்களாக வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விட இருக்கிறார்.

அந்த நேரத்தில் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் பிரதமர் மோடி, அனைவருடனும் உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு