தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் விநாயகரின் ஆசீர்வாதத்தை பெற கோயில்களுக்கு திரண்டு வருகின்றனர். இதையடுத்து தேசத்தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். கணபதி பாப்பா மோரியா!" என்று அவர் டுவிட் செய்துள்ளார்.

இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் "ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்