தேசிய செய்திகள்

மீன்வளத்துறைக்காக மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

மீன்வளத்துறைக்காக மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் மீன்வளத் துறையின் கவனம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முதன்மை திட்டமான மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தை இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

2020 முதல் 5 ஆண்டு காலத்திற்கு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் விவசாயிகள் நேரடியாகப் பயன்படுத்துவதற்கான விரிவான இன மேம்பாட்டு சந்தை மற்றும் கால்நடை பராமரிப்பை ஊக்குவிக்கும் வகையில் இ-கோபாலா செயலியையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மீன் உற்பத்தியில் ஈடுபடும் மக்கள் இந்த திட்டத்தால் பெருமளவில் பயனடைவார்கள். அடுத்த 3-4 ஆண்டுகளில் எங்கள் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, மீன்வளத் துறைக்கு ஊக்கமளிப்பதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது