டெல்லி,
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், "நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்று கூறினார்.
ஆகஸ்ட் 1947-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து 1964-ல் அவர் இறக்கும் வரை இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் நேரு.