தேசிய செய்திகள்

கொரோனா வைரசால் கர்ப்பிணிகளுக்கு அதிகம் பாதிப்பு?

கொரோனா வைரசால் கர்ப்பிணிகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில், அந்த நோயால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு ஒன்று நடத்தி உள்ளது. அதில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும், சுவாச தொற்று ஏற்படுவதும் சாதாரணமான ஒன்றுதான். ஆனால், காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும். கர்ப்பிணி பெண்களும், தற்போது குழந்தை பெற்ற பெண்களும், இவர்களில் கொரோனா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டவர்களும் தொடர்ந்து மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

கொரோனா வைரஸ் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதிக்கிறது என்றும், குழந்தைகளுக்கு, பிறக்கும்போது அல்லது தாய்ப்பால் கொடுக்கும்போது நோய் தொற்று ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஆய்வின் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு