புதுடெல்லி,
நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழா புதன்கிழமை கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜனாதிபதி மாளிகையில் இருந்து நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் துர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றுகிறார்.
முதலில் இந்தியிலும், அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் உரையாற்றுகிறார். பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை மொழி மாற்றம் செய்து இரவு 8 மணியளவில் ஒளிபரப்பப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.