தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் பயணம்

2 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் செல்கிறார்.

தினத்தந்தி

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசம் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்ற டிசம்பர் 16-ந்தேதியை வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. கடந்த 1971-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள வெற்றி தினம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன் விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி முதல்முறையாக வங்காளதேசம் செல்கிறார். 2 நாள் பயணமாக அங்கு செல்லும் ஜனாதிபதி அங்கு நடைபெறும் வெற்றி தின பொன் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.

கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திரமோடி வங்காளதேசம் சென்று பொன் விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றது நினைவுகூரத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து