கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

டெல்லியில் தொடக்கப்பள்ளிகள் நாளை முதல் திறப்பு - அரசு அறிவிப்பு

காற்றின் தரம் உயர்வை தொடர்ந்து டெல்லியில் தொடக்கப்பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன.

புதுடெல்லி,

டெல்லியின் அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிப்பு மற்றும் தீபாவளி பட்டாசு காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்து இருந்தது. இதனால் தொடக்கப்பள்ளிகள் கடந்த 5-ந் தேதி முதல் மூடப்பட்டன. அத்துடன் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் மாநிலத்தில் காற்றின் தரம் தற்போது உயர்ந்து இருக்கிறது. மேலும் விவசாய கழிவுகளை எரிக்கும் சம்பவங்களும் குறைந்திருக்கின்றன. எனவே மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகளை நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் உத்தரவும் திரும்ப பெறப்பட்டு உள்ளது.

இந்த தகவலை மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை