புதுடெல்லி,
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த வியாழக்கிழமை இந்தியாவுக்கு வருகை தந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஷேக் ஹசீனா, டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.