கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

புதுச்சேரியின் நீர் தேவைக்காக நதிகள் இணைப்பு தேவை: துணைநிலை கவர்னர்

தென்மண்டல கவுன்சிலில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.

தென்மண்டல கவுன்சிலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்கள் இடம்பெற்றன. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில முதல்- மந்திரிகள், தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

அப்போது அவர், புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைத்தல், விமான நிலைய விரிவாக்கம், புதுச்சேரியின் நீர் தேவைக்காக இந்திராவதி- கிருஷ்ணா- பெண்ணை- காவிரி நதிகள் இணைப்பு மற்றும் கோதாவரி- வராகநதி- தென்பெண்ணை நதிகள் இணைப்பு, தமிழ்நாடு வழியாக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மணல் கொண்டு வருதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு