தேசிய செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கார் பறிமுதல்

சைரன், அரசு முத்திரையுடன் பெயர் பலகை வைத்து பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேயில் பயிற்சி உதவி கலெக்டராக இருந்தவர் பூஜா கேட்கர். பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தனியறை, உதவியாளர், காருக்கு வி.ஐ.பி. எண் போன்ற வசதிகள் கேட்டு அடம்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் மீது எழுந்த புகாரை அடுத்து பூஜா கேட்கர் வாசிமுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்ததாகவும் புகார் எழுந்தது. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே பூஜா கேட்கர் விதியை மீறி சிவப்பு சைரன், அரசு முத்திரையுடன் பெயர் பலகை வைத்து பயன்படுத்திய சொகுசு காரை புனே போலீசார் பறிமுதல் செய்தனர். 21 முறை சாலை விதிகளை மீறியதற்காக அந்த காருக்கு இதுவரை ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த அபராதம் செலுத்தப்பட்டு விட்டதாகவும் ஆர்.டி.ஒ. அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை