image courtesy; ANI  
தேசிய செய்திகள்

பஞ்சாப்; 6 கிலோ அளவிலான போதைப்பொருள் பறிமுதல்

எல்லை பாதுகாப்பு படையினர் 6 கிலோ அளவிலான போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

தினத்தந்தி

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் எல்லை பகுதியில் போதைப்பொருள் கடத்தபடுவதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தோஸ்த்பூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 12 வோல்ட் பேட்டரிக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 6 பாக்கெட்டுகளில் 6 கிலோ அளவிலான ஹெராயின் போதைப்பொருளும், ஒரு பாக்கெட்டில் 70 கிராம் அளவிலான அபினும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை கடத்தி வந்தவர்கள் குறித்து தகவல் எதுவும் கிடைக்கப்படவில்லை. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை