தேசிய செய்திகள்

பஞ்சாப் மந்திரிசபை விரிவாக்கம்: 5 பேர் புதிய மந்திரியாக பதவியேற்பு..!

பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்து உள்ளார்.

தினத்தந்தி

சண்டிகார்,

பஞ்சாபில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்று பகவந்த் மான் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். மேலும் 17 பேர் மந்திரிகளாகவும் பொறுப்பேற்றனர்.

தற்போது பகவந்த் மான், தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்து உள்ளார். அவர் பதவியேற்ற பின்பு செய்யப்படும் முதல் மந்திரிசபை மாற்றம் இதுவாகும். புதிதாக 5 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் முதல் முறையாக சட்டசபையில் காலடி எடுத்து வைத்துள்ள எம்.எல்.ஏ.க்களாவர். அமன் அரோரா என்பவர் மட்டும் இருமுறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

புதிய மந்திரிகளுக்கு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்