தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் நாளை சந்திக்கிறார்

பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் நாளை (24-ம் தேதி) டெல்லியில் சந்திக்க உள்ளார்.

புதுடெல்லி,

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அபாரமாக வெற்றிப் பெற்று காங்கிரஸ், பாஜகவை ஓரங்கட்டி ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 16-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட விழாவில் பஞ்சாப் முதல்-மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்றார்.

இந்நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வரும் 24-ம் தேதி (நாளை) சந்திக்க உள்ளார். பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை பகவந்த் மான் முதல்முறையாக சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு வரும் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு