தேசிய செய்திகள்

கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் தீவிரம்

கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்தது.

தினத்தந்தி

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் கடன் தள்ளுபடி, வேளாண்பொருட்களுக்கு லாபகரமான விலை, பயிர் இழப்புக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிஷான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டி என்ற விவசாயிகள் அமைப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த போராட்டம் தற்போது வலுத்து வருகிறது.

நேற்று அந்த மாநிலத்தில் அமிர்தசரஸ், ஹோசியாபூர், டார்ன் தரண், பதன்கோட், பெரோஸ்பூர், பாஸில்கா, மோகா, ஜலந்தர், கபூர்தலா உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள 18 சுங்கச்சாவடிகளில் விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி போராடும் விவசாயிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் சர்வன் சிங் பந்தர் கூறும்போது, "எங்கள் கோரிக்கைகள் மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், இன்னும் அதிக எண்ணிக்கையிலான சுங்கச்சாவடிகளில் போராட்டம் நடத்துவோம்" என தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்