தேசிய செய்திகள்

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.

இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை முதல் 21-ம் தேதி வரை தினமும் நிர்மால்ய தரிசனம், அஷ்டாபிஷேகம், 25 கலசாபிஷேகம், களபாபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

இந்த 5 நாட்களிலும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்