தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் ராகுலும், பிரியங்காவும் முன்மாதிரியாக கருதப்படுகின்றனர் - உத்தரபிரதேச மந்திரி கருத்து

பாகிஸ்தானில் ராகுலும், பிரியங்காவும் முன்மாதிரியாக கருதப்படுவதாக உத்தரபிரதேச மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை விவகாரத்துறை மந்திரியாக இருக்கும் ஆனந்த் ஸ்வருப் சுக்லா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. பிளவுபடுத்துவதுதான், அதன் சித்தாந்தம். ராகுல் காந்தியும், பிரியங்காவும் பாகிஸ்தானில் முன்மாதிரியாக கருதப்படுகிறார்கள். அவர்களின் சுவரொட்டிகள், அந்த நாட்டின் சுவர்களை அலங்கரிக்கின்றன.

பிரியங்காவின் கணவர், ஏழைகளின் நிலத்தை அபகரித்தவர். எனவே, ஊழலைப் பற்றி பேச பிரியங்காவுக்கு உரிமை இல்லை. நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜாமீனில் இருக்கும் சோனியா, ராகுல் ஆகியோரைப் பற்றி பிரியங்கா பேசட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு