தேசிய செய்திகள்

5-வது முறையாக முதல்-மந்திரி பதவியேற்ற நவீன் பட்நாயக்குக்கு ராகுல் காந்தி டுவிட்டரில் வாழ்த்து

5வது முறையாக முதல்-மந்திரி பதவியேற்ற நவீன் பட்நாயக்குக்கு ராகுல் காந்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜூ ஜனதாதளம், சட்டசபை தேர்தலில் 146 தொகுதிகளில் 112 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது.

ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார். அவருக்கு ராகுல் காந்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், 5-வது முறை முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் பதவி ஏற்பது உண்மையில் நம்ப முடியாத ஒரு சாதனை. உங்களுக்கும், ஒடிசா மாநில மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை