தேசிய செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: கருத்து கூற ராகுல் காந்தி மறுப்பு

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து கூற ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்து விட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மசோதாவை சட்டத்துறை மந்திரி தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து லோக்சபா நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து கூற ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்து விட்டார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி , ' சரியான நேரம் வரும் வரை நான் இந்த விவகாரத்தில் கருத்து கூற மாட்டேன்" என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்