தேசிய செய்திகள்

'ராகுல் மக்களவைக்கு வந்திருக்கக்கூடாது' சுஷில் மோடி கருத்து

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தியின் எம்பி. பதவி பறிக்கப்பட்டது.

புதுடெல்லி, 

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தியின் எம்பி. பதவி பறிக்கப்பட்டது. ஆனால் நேற்று அவர் மக்களவைக்கு வந்திருந்து, அங்கு சிறிது நேரம் இருந்தார். இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சுஷில் மோடி எம்.பி., நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அவர் நாடாளுன்றத்திற்கு வந்து இருக்கக்கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவர் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் மீதான தீர்ப்பை மேல்கோர்ட்டு நிறுத்திவைத்தால் தகுதி இழப்பு தவிர்க்கப்படும். ஆனால் அது மிகவும் அரிதானது.

இவ்வாறு அவர் கூறினார்.

சூரத் கோர்ட்டு ராகுல் காந்தியை தண்டித்த விவகாரத்தில் பாட்னா கோர்ட்டில் சுஷில் மோடியும் அவதூறு வழக்கு தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு