தேசிய செய்திகள்

38 கோடி மதிப்பு உள்ள 2 வீடுகளை மனைவி ஷில்பா ஷெட்டிக்கு வழங்கிய ராஜ் குந்த்ரா

38 கோடி மதிப்பு உள்ள 2 வீடுகளை மனைவி ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு கணவன் ராஜ் குந்த்ரா மாற்றி உள்ளார்

தினத்தந்தி

மும்பை

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய போலீசார் மும்பையில் உள்ள நடிகையின் வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் கணவர் சிறையில் இருப்பதால் நடிகை ஷில்பா ஷெட்டி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்த அவர், மும்பை ஜூஹூ பகுதியில் இருந்த தனக்கு செந்தமான இரண்டு வீடுகளையும் தனது மனைவி ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றி உள்ளார். இந்த வீடுகளின் மதிப்பு சுமார் 38 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து