தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: ஜெய்ஸ்ரீராம் என கூறுமாறு முஸ்லீம் நபரை தாக்கிய நபர் பிடிபட்டார்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ஸ்ரீராம் என கூறுமாறு முஸ்லீம் நபரை தாக்கிய இளைஞரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

சிரோகி,

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில், பதின்ம வயது இளைஞர் ஒருவர், 45 வயது மதிக்கத்தக்க முஸ்லீம் நபரை, ஜெய்ஸ்ரீராம் எனக்கூறுமாறு வற்புறுத்தி சரமாரியாக தாக்கும் காட்சிகள் அண்மையில் வீடியோவாக வெளியானது. மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ஜெய்ஸ்ரீராம் என கூறும் படி ஏறக்குறைய 25 முறை தாக்கும் காட்சிகள் அடங்கியுள்ளன.

இந்த விடீயோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில் கடும் அதிர்வலைகள் எழுந்தன. மேலும், இந்த சம்பவம் குறித்து அபு ரோடு சிட்டி போலீஸ் நிலையத்தில் முஸ்லீம் சமூகத்தினர் புகார் அளித்தனர்

ராஜஸ்தான் போலீசாருக்கு கடும் நெருக்கடியை இந்த சம்பவம் ஏற்படுத்தியதையடுத்து விரைந்து செயல்பட்டு விசாரணையை துவங்கினர். இதில், முஸ்லீம் நபரை தாக்கும் இளைஞர் வினய் மீனா(18) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மீனா என்பவரை கைது செய்துள்ள போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது