தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

ராஜஸ்தானில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூ,

ராஜஸ்தான் மாநிலம் பூண்டி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஒரு மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் 45 வயது ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியை நேற்று முன்தினம் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனையடுத்து வீடு திரும்பிய அந்த மாணவி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் அழுதபடி கூறினாள். உடனே மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார், ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆசிரியரை தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT