Image Courtesy : ANI  
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 115 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பஜன்லால் சர்மா பதவியேற்றார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்றைய தினம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் வாசுதேவ் தேவ்நானி அழைப்பு விடுத்திருந்தார்.

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, மந்திரிசபை உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பஜன்லால் சர்மா, கூட்டத்தொடரின்போது அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் கருத்தை முன்வைக்க வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து