தேசிய செய்திகள்

ராஜீவ்காந்தி நினைவு ஜோதி, ராகுல்காந்தியிடம் ஒப்படைப்பு

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ராஜீவ்காந்தியின் நினைவு ஜோதி, ராகுல்காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவு ஜோதியை கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு ஆண்டு தோறும் எடுத்து செல்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் ராஜீவ்காந்தியின் நினைவுஜோதி, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த நினைவு ஜோதி நேற்று ராகுல்காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் மற்றும் கர்நாடக மாநில காங்கிரசார் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்