தேசிய செய்திகள்

3 முதல்-மந்திரிகளை தந்த ராமநகர் தொகுதியின் ரகசியம்

3 முதல்-மந்திரிகளை தந்த ராமநகர் தொகுதியை பற்றி இங்கு காண்போம்.

தினத்தந்தி

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய தகவல்களை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அதுபோல் தற்போது 3 பேருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கிய ராமநகர் மாவட்டத்தின் ரகசியம் குறித்து இங்கு காண்போம்.

நாடு சுதந்திர அடைந்து 76 ஆண்டுகள் ஆகிய நிலையில் கர்நாடக மாநிலம் இதுவரையில் 27 முதல்-மந்திரிகளை கண்டுள்ளது. ஒவ்வொரு முதல்-மந்திரியும் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும், வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ளனர். ஆனால் 3 பேருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கிய பாக்கியம் ராம்நகர் மாவட்டத்தைச் சேரும். அதில் அந்த 3 முதல்-மந்திரிகளும் ஒக்கலிக சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.

கர்நாடகத்தின் முதலாவது முதல்-மந்திரியான கே.சி.ரெட்டி முதல் தற்போதைய முதல்-மந்திரியான பசவராஜ் பொம்மை வரை ஒவ்வொருவரும் வெவ்வேறு தொகுதிகள், மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. மைசூரு மாவட்டத்தில் இருந்து தேவராஜ் அர்ஸ்-சித்தராமையா, சிவமொக்காவில் இருந்து பங்காரப்பா-எடியூரப்பா, கலபுரகியில் இருந்து வீரேந்திர பட்டீல்-தரம்சிங், தார்வாரில் இருந்து எஸ்.ஆர்.பொம்மை-ஜெகதீஷ் ஷெட்டர், பாகல்கோட்டையில் இருந்து நிஜலிங்கப்பா-பி.டி.ஜத்தி ஆகியோர் முதல்-மந்திரி பதவிகளை அலங்கரித்துள்ளனர். சிக்காவி தொகுதியில் இருந்து 1962-ம் ஆண்டு எச்.நிஜலிங்கப்பாவும், தற்போது பசவராஜ் பொம்மையும் எம்.எல்.ஏ.வாகி முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துள்ளனர்.

ஆனால் 1952-ம் ஆண்டு ராமநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கெங்கல் ஹனுமந்தய்யா முதல்-மந்திரி ஆனார். அதுபோல் 1983 மற்றும் 1988-ம் ஆண்டுகளில் தேர்தலில் வெற்றிபெற்றும் முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த தேவேகவுடா, 1994-ல் ராமநகரில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் அவருக்கு முதல்-மந்திரி பதவியும் கிடைத்தது. அதுமுதல் தேவேகவுடாவின் குடும்பத்தினருக்கு ராமநகர் மாவட்டம் அதிர்ஷ்ட மாவட்டமாக விளங்கியது. 2004-ம் ஆண்டு ராமநகர் போட்டியிட்டு வெற்றிபெற்ற குமாரசாமியும், திடீரென நிகழ்ந்த அரசியல் பரபரப்புகளால் முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தார். அதையடுத்து 2018-ம் ஆண்டும் ராமநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிகண்ட அவர் முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார். 2018-ம் ஆண்டு தேர்தலில் வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்ட ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு முதல்-மந்திரி பதவி தேடி வந்தது.

இப்படி ராமநகர் தொகுதியில் ரகசியத்தைப் பார்த்த அரசியல் தலைவர்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து