தேசிய செய்திகள்

வங்கித்துறையில் ஊழலை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை

வங்கித்துறையில் ஊழலை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வங்கித்துறையில் ஊழல்கள் நடைபெறும்போதெல்லாம், அவற்றை தடுக்க தவறி விட்டதாக ரிசர்வ் வங்கி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுவதை தவிர்க்கும்வகையில் ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. நிதி சார்ந்த நிறுவனங்களை மேற்பார்வையிட தனியாக 3 துறைகளையும், ஒழுங்குபடுத்த தனியாக 3 துறைகளையும் ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. இந்த 2 பணிகளையும் ஒருங்கிணைந்து கவனிக்க இரண்டு ஒருங்கிணைந்த துறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கி உள்ளது.

இந்த துறைகள், நேற்று அமலுக்கு வந்தன. இதன்மூலம், வங்கித்துறை ஊழல் அபாயங்களை திறம்பட அணுக முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை